இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்ளும் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கணித்துள்ளார்.
மும்பையில் இன்று 2023 உலகக் கோப்பையை தொடங்க முரளிதரன் மற்றும் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் அழைக்கப்பட்டனர்.
போட்டிகள் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும்.
"இங்கிலாந்து இப்போது நன்றாக விளையாடுகிறது. அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒருநாள் போட்டிகளாக விளையாடுகிறார்கள். இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பதே எனது கருத்து" என்று முரளிதரன் கூறினார்.
இருப்பினும், நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்வதை முரளிதரன் விரும்புவதாக தெரிவித்தார்.
"பாகிஸ்தான் ஒரு நல்ல அணி, ஆனால் கணிக்க முடியாதது. எந்த நாளிலும், அவர்கள் இன்னும் அற்புதமான ஆட்டத்தை விளையாட முடியும். தனிப்பட்ட முறையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாடுவதையும், ரசிகர்களை மகிழ்விப்பதையும் பார்க்க விரும்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அரையிறுதிக்கு வரும் அதேவேளை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இறுதிப் போட்டி இடம்பெறும் என சேவாக் கணித்துள்ளத்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment