Recent Posts

Search This Blog

மத நல்லினக்கத்தை பாதுகாக்க விஷேட பொலிஸ் குழு. ; ஜனாதிபதி உத்தரவு ..

Monday, 29 May 2023


மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.


நாட்டின் பல இடங்களிலிருந்து  இவ்வாறான குழுக்கள் தோன்றி அரசாங்கத்தை  சங்கடப்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயற்படுவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.  


இதுபோன்ற நாசகார செயல்களை கண்காணித்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் சமூகத்தை சென்றடையும் முன்பே தடுக்கும் பொறுப்பு புதிதாக நிறுவப்பட்டுள்ள புதிய பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக புதிய பொலிஸ் பிரிவு மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.



No comments:

Post a Comment