Recent Posts

Search This Blog

அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள திறமையற்ற அரசத்துறை ஊழியர்களை நீக்க நடவடிக்கை .

Wednesday, 1 February 2023



அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுய ஓய்வு பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவரதன தெரிவித்துள்ளார்.


இந்த சுய ஓய்வு பொறிமுறையின் மூலம் திறமையற்ற பொதுத்துறை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து திணைக்களங்களிலும் தமது செலவினங்களைக் குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் திறைசேரி வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், திறைசேரியின் சுற்றறிக்கைகளுக்கு அமைச்சின் செயலாளர்கள் அனைவரும் கட்டுப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


அரச சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது எனவும், குறிப்பிட்ட அரச நிறுவனத்தில் உள்ள வெற்றிடங்கள் தற்போதுள்ள அரச துறை நிறுவனங்களினால் நிரப்பப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


“உதாரணமாக, புதிதாக 29,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பரீட்சை மூலம் அரசாங்கத் துறையின் உற்சாகமான பணியாளர்களில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment