
பண்டிகைக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை விற்பனை செய்த 8,231 வர்த்தகர்களைக் கைது செய்வதில் நுகர்வோர் விவகார அதிகாரசபை வெற்றி பெற்றுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சில வர்த்தகர்கள் காலாவதியான கேக், பிஸ்கட் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்துள்ளனர். முட்டை வியாபாரிகள் உட்பட ஏனைய விற்பனையாளர்களை கைது செய்ய நாடு முழுவதும் 5,200 விசேட புலனாய்வு அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ததாக நாடு முழுவதும் 809 முட்டை விற்பனையாளர்கள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 708 விற்பனையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் 468 முட்டை விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை தலைமை விசாரணை அதிகாரி எச்.எம். குணரத்ன தெரிவித்துள்ளார்..
No comments:
Post a Comment