Recent Posts

Search This Blog

மாடுகளுக்கு அநியாயம் நடப்பதால் மாட்டிறைச்சி கடை தேவை இல்லை, மூடி விடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை.

Monday, 24 July 2023


யாழ்.மாவட்டத்தின் பசுந்தீவு என அழைக்கப்படுகின்ற நெடுந்தீவில் மாட்டிறைச்சி கடைகள் தேவையில்லை என நெடுந்தீவு பிரதேச பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. நெடுந்தீவு பிரதேசத்தில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு மாடுகளுக்கு அனுமதிகளை பெற்றுவிட்டு வயது குறைந்த மாடுகள் மற்றும் நல்லின மாடுகள் சட்ட விரோதமாக இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன என்று பிரதேச பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


நெடுந்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தலைமையில் நடைபெற்ற
ஒருங்கிணைப்பு குழுக்
கூட்டத்தில் பொது
அமைப்புக்களால் சுட்டிக்
காட்டப்பட்டதுடன்
கால்நடை வைத்தியரின்
சிபார்சுகள் இன்றியும் உரிய
அனுமதிகள் இன்றியும் கன்றுகுட்டிகள் இறைச்சிக்
வெட்டப்படுவது
தொட ர்பில் ஆதாரங்களுடன்
சுட்டிக்காட்டப்பட்டன.

இவ்வாறு
சுட்டிக்காட்டப்பட்டதுடன்
பசுந்தீவாகிய நெடுந்தீவில்
எதிர்காலத்தில் கால்நடைகளை
பாதுகாக்க நயினாதீவில்
மாட்டிறைச்சி கடைகள்
இல்லாதது போன்று
நெடுந்தீவிலும் மாட்டிறைச்சி
கடைகளை மூடுமாறும்
கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன்
நெடுந்தீவில் இருந்து
கால்நடைகள் படகுகள்
மூலம் கடத்தப்பட்டும்
வருகின்றன அன்மையில்
கூட இவ்வாறு கடத்திச்
செல்லப்பட்ட கால்நடைகள்
மீட்கப்பட்டிருந்தன.
குறிப்பாக மிகவும்
வயது குறைந்த மாடுகள்
இறைச்சிக்காக வெட்டப்பட்டு
வருவதாகவும் அனுமதி
பத்திரத்தோடு ஒரு சில
மாடுகளும் ஏனைய மாடுகள்
சட்டவிரோதமாகவும்
வெட்டப்படுவதாகவும்
பிரதேச அமைப்புகளால்
பொதுமக்களாலும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment