Recent Posts

Search This Blog

நேற்றிரவு 150 க்கும் அதிகமானவர்களை பலி கொண்ட கொரிய நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 27 வயது கண்டி பிரதேச நபரும் (முகம்மத் ஜினாத்) உயிரிழப்பு.

Saturday, 29 October 2022


தென் கொரியாவின் சியோல் நகரில் நேற்று (29) இரவு இடம்பெற்ற ஹாலோவீன் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 27 வயதுடைய இலங்கையர் ஒருவரும் உள்ளடக்கப்படுகிறார் என தெரிவிக்கப்படுகிறது.


கோவிட் 19 தொற்றுநோய்க்குப் பிறகு அதன் முதல் முகக் கவசம் இல்லாத ஹாலோவீன் கொண்டாட்டங்களை நடத்தும் சியோலின் இடாவோன் பகுதியில் ஒரு குறுகிய தெருவில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பங்கேற்பாளர்கள் நசுக்கப்பட்டபோது 150 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது.

மற்றும் 76 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சோகம் நிகழ்ந்தது.

கண்டியை சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவரே (முகம்மத் ஜினாத்) சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment