வத்தேகம அல்-அக்ஷா முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் Kandy Model பாடசாலை ஆகியனவற்றின் இணைந்த ஏற்பாட்டில் ‘Mother Sri Lanka’ எனும் தொனிப்பொருளில் ஒரு விசேட செயற்றிட்டம் 2022.08.24 புதன்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விஷேட நிகழ்வில் மாணவர்களிடையே ‘நாம் இலங்கையர்’ எனும் உணர்வை மேம்படுத்துவதற்கான நிகழ்வுகள் திட்டமிட்டு நடாத்தப்பட்டன.
தாய் நாட்டின் வெற்றிகரமான எதிர்காலத்திற்கு இனங்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் சகவாழ்வு எனபனவற்றின் அவசியத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் மாணவர்களால் இணைந்து நடாத்தப்பட்டமை இந்நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.
தகவல்:
ஊடகப்பகுதி
No comments:
Post a Comment