Recent Posts

Search This Blog

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 6 லட்சத்தால் குறைக்கவேண்டும்..

Wednesday, 16 November 2022

இந்நாட்டில் பணியாற்றும் 600,000 அரச உத்தியோகத்தர்கள் நீக்கப்பட வேண்டுமென சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 


வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எம்.பி., 15 பேருக்கு ஒரு அரச ஊழியர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


அரசியல் நியமனங்களினால் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எம்.பி குறிப்பிட்டார்.


ஜப்பானில் 40 பேருக்கு ஒரு அரச பணியாளர் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment