குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த நாட்டில் இது போன்ற கூட்டு மரண தண்டனை நிறைவேற்றம் மிகவும் அபூா்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அந்நாட்டு அரச ஊடகம் ஒன்று, பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 போ் மத்திய சிறைச் சாலையில் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டனா்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா்களில் 3 குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் அடங்குவா் எனத் தெரிவித்துள்ளது.
மனிதா்களின் மிகவும் புனிதமான உரிமையாகிய உயிர்வாழும் உரிமையை அவா்கள் பிறரிடமிருந்து பறித்ததால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசுத் தரப்பு நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment