Recent Posts

Search This Blog

அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு தப்பிப்பதை தடுக்க செயற்பாடுகளில் இருந்து விலகிய மற்றுமொரு விமான நிலைய ஊழியர் குழு I

Monday, 11 July 2022


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதாக சுதந்திர ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நண்பகல் அமுலுக்கு வரும் வகையில் இந்த செயற்பாடுகளில் இருந்து விலகுவாதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற மற்றும் நெருக்கடி நிலை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரசியல் பிரமுகர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த பட்டுப்பாதை அனுமதி முனையத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பலமான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment