Recent Posts

Search This Blog

சுவர்க்கம் செல்வதற்காக தற்கொலை செய்யும் கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட 30 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

Tuesday, 9 January 2024


சுவர்க்கம் செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை தற்கொலைக்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் பிரசார கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளால் தொடங்கப்பட்ட விசாரணையின்படி, இந்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளதுதோடு, இந்த குழுவில் பொதுமக்கள் உள்ளிட்ட சில பிக்குகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் கூறி ருவன் பிரசன்ன சுமார் பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரைப் பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட முப்பது பேர் தீவிர கருத்துக்களை பரப்பும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment