நடைபெற்று வரும் ரக்பி உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வரும் ஃபிஜி அணியின் வீரர் ஜோசுவா துய்சோவா துரதிர்ஷ்டவசமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார். இவரது ஏழு வயது மகன் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இந்த வாரம் நடைபெற உள்ளது. இருப்பினும், இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் போட்டியில் தனது அணியுடன் இருக்க ஜோஷ்வா முடிவு செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஜார்ஜியா அணிக்கு எதிராக நடைபெற்ற ரக்பி உலகக் கிண்ண போட்டியின் பின்னர் நீண்ட நாள் உடல் நலக்குறைவால் இருந்த தனது மகன் காலமானார் அறிந்துகொண்டார்.
இருப்பினும், இது தொடர்பாக ஜோசுவா கூறுகையில், அணியில் தொடர்ந்து மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன்.
சில காலத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு ரக்பி உலகக் கிண்ண போட்டிகளில் ஃபிஜி அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, மேலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவையும் தோற்கடிக்க முடிந்தது. அதன்படி, ஃபிஜி அணி அரையிறுதிப் போட்டிக்குள் நுழையும் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது என தெரிவித்துருந்தார்.




No comments:
Post a Comment