நாம் கல் நெஞ்சக் காரர்களாக இருந்து விட முடியாது!
இன்றைய குத்பாக்களை பலஸ்தீன் மற்றும் அல்குத்ஸ் தொடர்பில் அமைத்துக் கொள்வதும் அவர்களுக்காக துஆ பிரார்தனை செய்வதும் எமது தெரிவு என்பதனை விட கடமை என்பதனை உலமாக்களாகிய நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்!
அணிசேரா கொள்கைகளின் படி இலங்கயின் வெளியுறவுக் கொள்கை ஆரம்பம் முதலே பலஸ்தீன் மக்களது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருவதால் அரபு முஸ்லிம் நாடுகளின் நட்பு நாடாக நம் நாடு கருதப்படுகிறது.
கவனயீர்ப்பு பேரணிகள் நடைபெறும் இடங்களில் இடம் பொருள் ஏவல் அறிந்து நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நாம் நடந்து கொள்ள வேண்டும்!
*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 13.10.2023



No comments:
Post a Comment