Recent Posts

Search This Blog

காலி வீதியை மறிக்கும் வகையில் அடிதடி - நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் கைது.

Friday, 15 September 2023


காலி வீதியை மறிக்கும் வகையில் தகராறில் ஈடுபட்ட 12 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.



கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வட்டிப் பணப் பரிவர்த்தனையே தகராறுக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார், இரு தரப்பிலும் தாக்கப்பட்டதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.



உறவினர்களுக்கிடையில் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களும் கொறலவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்


No comments:

Post a Comment