Recent Posts

Search This Blog

அனுமதியின்றி உடல் ரீதியான தொடர்பு வைத்த குற்றச்சாட்டு... தனுஷ்க குணதிலக குற்றமற்றவர் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

Wednesday, 7 June 2023


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, கடந்த ஆண்டு டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.


32 வயதான அவர், கடந்த நவம்பரில் கைது செய்யப்பட்ட உடனேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் (SLC) இடைநீக்கம் செய்யப்பட்டார்.


அவர் எதிர்கொண்ட நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் மூன்று கடந்த மாதம் கைவிடப்பட்டது.


அனுமதியின்றி உடலுறவு தொடர்பான மீதமுள்ள குற்றச்சாட்டில் குணதிலக குற்றமற்றவர் என்ற மனுவினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் அந்த மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அசோசியேட்டட் பிரஸ் (AAP) தெரிவித்துள்ளது.


அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது நாட்டிற்காக 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய முன்னணி துடுப்பாட்ட வீரர், தனது பிணை நிபந்தனைகளை மாற்ற முயற்சித்தார்.


எனவே அவர் தினசரி அல்லாமல் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக AAP தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment