Recent Posts

Search This Blog

இலஙககக வநத உகரனய சறறலப பணன பலயல வனகடம சயத தபபயடய இளஞன.

Friday, 23 June 2023
ஹபராதுவ, பெய்லகொட சைத்யலங்கார விகாரையில் வழிபாடு செய்யச் சென்ற உக்ரேனிய சுற்றுலாப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞனை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



உனவடுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இந்த சுற்றுலாப் பெண், கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



சுற்றுலாப் பெண் நேற்று முன்தினம் வழக்கம்போல் மத வழிபாட்டு தளம் ஒன்றுக்கு சென்று போதி மரத்தை வழிபட்டுள்ளார்.



அப்போது, குறித்த சந்தேக நபர் வந்து வழிபாட்டு அறை ஒன்றுக்குள் வருமாறு அழைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



இளைஞனின் அழைப்பின் பிரகாரம், அங்கு சென்று வணங்கிவிட்டு வெளியே வந்தவுடன் குறித்த இளைஞன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓடிவிட்டதாக பொலிஸாரிடம் குறித்த பெண் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சியடைந்ததாக சுற்றுலாப் பெண் பொலிஸாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment