சிங்கப்பூரில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எடுத்துள்ளது.
சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த இலங்கைப் பெண், தான் பணியாற்றிய வீட்டு கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை இன்று இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R



No comments:
Post a Comment