ரனில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
சஜித் அணியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ரனிலுடன் இணைந்து பணியாற்ற விருப்பமான உள்ளனர் சஜித்தும் அவருடன் உள்ள ஒரு சிலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷவின் மொட்டு கட்சி மீண்டும் தலைதூக்கிவிட கூடாது என்பதற்காக ரனிலையும் சஜித்தையும் இணைக்க முயற்சித்ததாக தான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment