Recent Posts

Search This Blog

தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்க, காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை உண்ணா நோன்பு போராட்டம் முன்னெடுப்பு.

Sunday, 16 April 2023


தமிழர் எம் மரபுரிமைகளை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாவிரத போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தது.

கீழ்வரும் ஐந்து பிரதான கரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

# அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன்

வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பெளத்த கட்டுமானம் மற்றும் பேளத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.


இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.


மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில்
பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.


போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்

என்ற கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாநோன்பு
போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment