பத்து புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்தார் .
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, புதிய நியமனங்கள் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
ஜனக பண்டார,
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
ரோஹித அபேகுணவர்தன,
காமினி லோககே,
சரத் வீரசேகர,
எஸ்.எம். சந்திரசேன,
சி.பி. ரத்நாயக்க மற்றும் SB முன்மொழியப்பட்ட பெயர்களில் அடங்குவர்.
எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு முன்மொழியப்பட்ட பெயர் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
குறித்த பட்டியல் ஏற்கனவே உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment