
தனது தந்தை முஸ்லிம் என்பதாலேயே தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாக முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டார்.
அரச தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.
மதம் என்பது யாரும் விரும்பி பெற்றுக்கொண்ட ஒன்று அல்ல என கூறிய அவர் மதம் என்பது தங்கள் பிறப்புடன் வந்த ஒன்று என கூறினார்.
ஆனால் சிலர் மதத்தை தாங்கள் விரும்பி ஏற்றுகொண்டதை போல பாசாங்கு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
ஜாதி மதம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும் என கூறிய பைஸர் முஸ்தபா சிலர் ஜாதி மதம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாராளுமன்றம் செல்வதாக குற்றம் சுமத்தினர்.


No comments:
Post a Comment