Recent Posts

Search This Blog

தமது ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணியின் 60 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை திருடிய குற்றத்தில் உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது.

Wednesday, 18 January 2023


 ஹபராதுவ பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஹோட்டல் கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வெளிநாட்டு பிரஜையின் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


ஹோட்டலிலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தின் இரகசிய இலக்கத்தை பயன்படுத்தி, இந்த திருட்டு இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 



No comments:

Post a Comment