Recent Posts

Search This Blog

மோட்டார் சைக்கிளை செலுத்தியபடி செல்பி அடிக்க முற்பட்ட இளைஞர்கள் இருவர் மாட்டுடன் மோதி படுகாயம்.

Monday, 15 August 2022


வவுனியாவிலிருந்து திருகோணமலை
நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த
இளைஞர்கள் இருவர், மாடுடன் மோதி
விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த
நிலையில், திருகோணமலை பொது
வைத்தியசாலையில் நேற்று முன்தினம்
(14) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவ் இளைஞர்கள் இருவரும்
மோட்டார் சைக்கிளை செலுத்திக்
கொண்டிருந்த வேளையில் கையடக்க
தொலைபேசியில் செல்ஃபி எடுப்பதற்கு
முற்பட்டுள்ளனர்.


இந்நிலையில், வீதியின் குறுக்கே
வந்த மாடுடன் மோட்டார் சைக்கிள்
மோதியதாகவும் இதனை அடுத்து
இருவரும் படுகாயமடைந்த
நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை
பொது வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்
வைத்தியசாலை பேச்சாளரொருவர்
தெரிவித்தார்.


இவ்விபத்தில் வவுனியா-
பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28
மற்றும் 30 வயது உடையவர்களே
படுகாயமடைந்துள்ளனர்.



இந்த விபத்து தொடர்பிலான
விசாரணைகளை மொரவெவ
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment