Recent Posts

Search This Blog

பெரும்பாலான நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுகிறது.. ஆனால் இலங்கையில் தடுப்பூசியின் நான்காவது டோஸைப் பெற மக்களுக்கு ஆர்வம் இல்லை ; சுகாதார அமைச்சு I

Sunday, 17 July 2022


கொரோனா வைரஸ் தடுப்பூசியின் நான்காவது டோஸைப் பெறுவதில் மக்கள் ஆர்வமின்றி இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இதுவரை நான்காவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 14,000க்கும் குறைவாகவே இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

20 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் நான்காவது டோஸைப் பெற முடியும் என்று டாக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

பெரும்பாலான நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment