Recent Posts

Search This Blog

உலகக் கிண்ண தொடருக்கு முன்னர் LPL தொடரை நடத்தியதாலே பல இலங்கை வீரர்கள் உடல் உபதைக்கு உள்ளாகினர் ; விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு.

Sunday, 15 October 2023


2023ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை இந்த வருடம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடத்தியமையே பல வீரர்களின் உபாதைக்கு காரணம் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாடு என்ற வகையில் இலங்கை, விளையாட்டில் பின்னோக்கி நகர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மினிப்பே மற்றும் யோதா கால்வாய்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment