
ஈஸ்டர் தாக்குதல் நடக்க 29 மாதங்களுக்கு முன்னரே நான் இஸ்லாமிய அடிப்படைவாத குழு தொடர்பில் தான் பாராளுமன்றில் அறிவித்திருந்ததாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
செனல் 4 ஆவணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என கூறிய அவர்
ஈஸ்டர் தாக்குதல் நடக்க 29 மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாத குழு தொடர்பில் பாராளுமன்றில் நான் அறிவித்திருந்தேன்.அப்போது முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் என்னை இனவாதியாக காட்ட முயற்சித்தார்கள். நல்லாட்சியில் என்னோடு அமைச்சர்களாக இருந்தவர்கள் கூட என்னை விமர்சித்தார்கள். நான் கூறிய தகவலை அப்போதய அரசாங்கம் செவிமடுத்து இருந்தால் 259 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment