காத்தான்குடி, புதிய
காத்தான்குடி அப்ரார்
பிரதேசத்தில் திங்கட்கிழமை
(07) விஷர் நாய் கடித்ததில்
நான்கு பேர் காயமடைந்து ,
மூன்று பேர் காத்தான்குடி தள
வைத்தியசாலையிலும் ஒருவர் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையிலும்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய காத்தான்குடியில் வீடொன்றில் வளர்த்து வரும்
விஷர் நாயொன்று இவ்வாறு கடித்துள்ளது.
இதையடுத்து
குறித்த நாயினால்
இப்பகுதியில் வசிப்பவர்கள்
அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக
இப்பகுதி மக்கள்
காத்தான்குடி நகர
சபை மற்றும் சுகாதார
அதிகாரிகளின் கவனத்துக்கு
கொண்டு வந்துள்ளனர்.



No comments:
Post a Comment