Recent Posts

Search This Blog

இலங்கைக்கு போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்காது ; வளிமண்டலவியல் திணைக்களம்

Tuesday, 1 August 2023


 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு போதியளவு மழைவீழ்ச்சி பதிவாகாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


பருவப் பெயர்ச்சியின் போதும் போதியளவு மழை பெய்யவில்லையென திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமனீ ஜயவர்தன கூறினார்.


இதனிடையே, நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீரேந்துப் பகுதிகளின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது.


இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 20 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது



No comments:

Post a Comment