
இலங்கை ஹஜ் கமிட்டி தலைவர் அல்ஹாஜ் அஹ்கம் அவர்களின் கோரிக்கையை அடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலையீட்டின் பேரில், சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மேலதிகமாக 140 ஹஜ் கோட்டாக்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
சவூதி ஹஜ் அமைச்சகம் இந்த ஆண்டு 3,500 யாத்ரீகர்களுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை வழங்கியுள்ள நிலையில் மேலும் 140 வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ள இலங்கையில் பிறந்தவர்களுக்கு ஹஜ் கோட்டக்களை வழங்கியுள்ளது.


No comments:
Post a Comment