தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கோரியுள்ளதாக சுதந்திர மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“பிரதமர் பதவியை மாற்றுவதற்கான நகர்வுகள் இருப்பதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த எங்கள் நண்பர்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தனர்.
தினேஷ் குணவர்தனவை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு அவர்கள் உத்தேசித்துள்ளனர் என எம்.பி ஜயசுமன தெரிவித்தார்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசாங்கம் பதவி விலக நேரிடும் என தெரிவித்த அவர், பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார்.
"இதற்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்க மாட்டோம். மகிந்த ராஜபக்ச இப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தனது ஓய்வு காலத்தை வீட்டிலேயே அனுபவிக்க வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment