Recent Posts

Search This Blog

நாட்டை விட்டு நகரும் தாழ் அமுக்கம்.... இன்று மாலை முதல் நாட்டில் சீரான வானிலை எதிர்பார்ப்பு.

Sunday, 25 December 2022


தாழ் அமுக்கமானது நலிவடைந்த தாழ் அமுக்க பிரதேசமாக மாறியுள்ளது. இது இன்று காலையளவில் இலங்கையின் மேற்குக் கரையை நோக்கி நகரக்கூடும்.

இது நாட்டை விட்டு நகர்ந்த பின்னர் இன்று மாலை முதல் நாட்டின் வானிலை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தின் காரணமாக மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறிப்பிட்ட இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிற்கு மேலாக மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கும் அத்துடன் வங்காள விரிகுடாவின் தென் மேற்கு கடல் பிராந்தியத்திற்கும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 ‐ 65 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து கிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பானநிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.



No comments:

Post a Comment