போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை அடுத்தாண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான 5,000 உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment