Recent Posts

Search This Blog

I தங்க புத்தர் சிலை... ஜோடிக் கண்கள் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆனது ; மோசடி விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது.

Monday, 31 October 2022

தங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறி ஐந்து கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற புத்தர் சிலையுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலையின் ஜோடிக் கண்கள் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆனது என்றும் சந்தேக நபர்கள் வாங்குபவரிடம் கூறியுள்ளனர்.

இதன் உயரம் சுமார் 12 அங்குலம் மற்றும் எடை சுமார் 14.6 கிலோகிராம் எனவும், கைது செய்யப்பட்ட இருவரும் தெஹியத்தகண்டி லிஹினியாகம பகுதியைச் சேர்ந்த 27-34 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருந்த வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது மேலும் மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்


No comments:

Post a Comment