Recent Posts

Search This Blog

ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த குற்றத்தில் பெண்கள், பௌத்த பிக்குகள் உட்பட 84 பேர் கைது.

Saturday, 24 September 2022


கொழும்பு - மருதானை - டீன்ஸ் வீதிப்பகுதியில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த 84 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 பெண்கள், 2 பௌத்த பிக்குகள் உட்பட 84 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த ஆர்பாட்ட பேரணியை கலைக்க கண்ணீர்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.


No comments:

Post a Comment