Recent Posts

Search This Blog

எரிபொருள் நிரப்ப இந்தியா சென்றதால் ஶ்ரீ லங்கனுக்கு மாதாந்தம் 7 மில்லியன் டொலர் நட்டம்..

Friday, 2 September 2022


சி.எல்.சிசில்-


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வதன் காரணமாக மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக நட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கும், எரிபொருள் மற்றும் விமானங்களின் தேய்மானத்துக்கும் ஆகும் செலவை ஈடுசெய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்து முதல் முப்பது வரையிலான விமானங்கள் எண்ணெய் பெற இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் மேலதிக பயணம் என்பதோடு விமானத்தின் தேய்மானம் நீண்ட கால பிரச்சினையாகும்.


நாளொன்றுக்கு சுமார் 550,000 லீற்றர் விமான எரிபொருள் தேவைப்படுகிறது.




No comments:

Post a Comment