கடந்த வாரம் பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு சொந்தமான கண்ணீர் புகை குண்டுகளை
திருடிய குற்றத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் 50 கண்ணீர் புகை குண்டுகளை ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்ணீர் புகை குண்டுகளை ஏற்றிச் சென்ற மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், கண்ணீர் புகைக் குண்டுகளை கைப்பற்ற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
ஒபேசேகரபுர நாணயக்கார மாவத்தையில் வைத்து 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, பொரளை கோதமி வீதியில் உள்ள தனது தங்கும் விடுதியில் 50 கண்ணீர் புகை குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அந்த நபர் வெளிப்படுத்தியுள்ளார்.
பொலனறுவை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:
Post a Comment