Recent Posts

Search This Blog

20 ஆம் திகதி ரணில் ஜனாதிபதியானால்; 21 ஆம் திகதி போராட்டம் வெடிக்கும்- தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம்

Sunday, 17 July 2022


கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க பதவியை விட்டு விலக வேண்டும் என்றே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க அந்த பதவியை பெற்றுக்கொள்ள முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 


அவர் பதவி விலக வேண்டும். 20ஆம் திகதி நடைப்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றால் 21 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபடுவோம். மக்களின் குரலுக்கு செவிசாய்த்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். 


ரணிலை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.


காவியன்



No comments:

Post a Comment