Recent Posts

Search This Blog

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை

Thursday, 2 June 2022


தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை என விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் விவசாய, வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். 


எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும், உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவதால் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


பட்ஜெட்டில் அரசு ஒதுக்கிய பணமும் முடிந்து விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 


உயிரியல் பூங்காக்களுக்கு உணவு சப்ளை செய்த சப்ளையர்களுக்கு தற்போது ரூ. 59 மில்லியன் செலுத்த உள்ள அதேவேளை இந்த ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் ரூ.120 மில்லியன் தேவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 


உரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு திறைசேரியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.



No comments:

Post a Comment