உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்றே தமது கட்சி கருதுவதாக தெரிவித்தார்.
“தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக யார் சொன்னது? தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
தேர்தல் நடத்தப்பட உள்ளது, ஒத்திவைக்க அல்ல” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்



No comments:
Post a Comment